Sunday, August 29, 2010

இறந்த காலம்

அது ஒரு மார்கழி மாத காலை பொழுது. அவன் சாலை ஓரம் நடந்து சென்றுகொண்டு இருந்தான். பனி விழுந்து ஈரமாய் இருந்தன சாலைகள். மெல்லிய ஊதல் காற்று உடலில் பட்டு ரோமங்கள் சிலிர்த்தன. வீடுகளின் வாசலில் பெண்கள் சாணம் இட்டு மெழுகி அழகிய கோலங்கள் இட்டு நடுவில் மாட்டு சாணம் உருட்டி வைத்து அதன் நடுவில் பரங்கி பூ வைத்து இருந்தனர். தொலைவில் பெருமாள் கோவில் மணி ஓசை பூஜை தொடங்கி விட்டதை தெருவித்து கொண்டது. இன்னும் சற்று நேரத்தில் பூஜை முடிந்து சுடச்சுட வெண்பொங்கல் விநியோகம் ஆரம்பம் ஆகிவிடும். ஏனோ கோவில் மணி கேட்டதும் பொங்கல் ஞாபகம் தான் வந்ததே தவிர ஆண்டாளோ திருப்பாவை திருவெம்பாவையோ ஞாபகம் வரவில்லை. அப்படியே நடந்து சென்று தெப்பகுளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். மார்கழி மாத பனி இறங்கிய குளத்தில் குளித்தது உடல் சூடு எல்லாம் போனதைப் போல் இருந்தது. சட்டென்று காலில் ஒரு சூடு. காலில் ஒரு சிகரட் துண்டு சுட்டு விட்டது. எதிரில் டூ வீலரில் வந்தவன், முகத்தில் புகையை ஊதிவிட்டு போனான். அடடே இவன் இறந்தகாலத்தில் மூழ்கி போனானோ.? அதுதான் இறந்து போய்விட்டதே......!!!!!!

No comments: