Tuesday, September 21, 2010

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்குசங்கத் தமிழ் மூன்றும் தா
பாலும் நல்ல சுவையுடைய தேனும் சர்க்கரை பாகும் பருப்பும் கலந்து உனக்கு நான் பிரசாதம் ஆக தருவேன். நீ எனக்கு இயல் இசை நாடகம் ஆகிய மூன்று தமிழ் களையும் எனக்கு தந்து அருள்வாய் ஆக
புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவைமண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்தீதொழிய நன்மை செயல். 1
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்பட்டாங்கில் உள்ள படி. இடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றேஇடும்பொய்யை மெய்யென்(று) இராதே - இடுங்கடுகஉண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3
எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் ஒண்ணாதுபுண்ணியம் வந்தெய்து போதல்லால் - கண்ணில்லான்மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமேஆங்காலம் ஆகும் அவர்க்கு. 4
வருந்தி அழைத்தாலும் வாராத வாராபொருந்துவன போமி(ன்) என்றால் போகா - இருந்தேங்கிநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்துதுஞ்சுவதே மாந்தர் தொழில். 5
உள்ளது ஒழிய ஒருவர்க்(கு) ஒருவர்சுகம்கொள்ளக் கிடையா குவலயத்தில் -வெள்ளக்கடலோடி மீண்டும் கரையேறினால் என்உடலோடு வாழும் உயிர்க்கு. 6
எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்புபொல்லாப் புழுமலிநோய் புன்குரம்பை -நல்லார்அறிந்திருப்பார் ஆதலினால் ஆம்கமல நீர்போல்பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. 7
ஈட்டும் பொருள்முயற்சி எண்ணிறந்த ஆயினும்ஊழ்கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்தரியாது காணும் தனம். 8
ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வா(று)ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்குநல்ல குடிபிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்இல்லை என மாட்டார் இசைந்து . 9
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா!நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்எமக்கென்? என்(று) இட்டு, உண்டு, இரும் 11
ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறேஉன்னோடு வாழ்தல் அறிது. 11
ஆற்றங் கரையின் மரமும் அரசறியவீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்பழுதுண்டு வேறோர் பணிக்கு, 12
ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்மெய்அம் புவியதன் மேல். 13
பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீவயிறு வளர்க்கைக்கு மானம் அழியாதுஉயிர்விடுகை சால உறும். 14
சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்குஅபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்விதியே மதியாய் விடும். 15
தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மைகற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள்அற்புதமாம் என்றே அறி. 16
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இருநிதியம்?- வையத்து"அறும்-பாவம்!" என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்றுவெறும்பானை பொங்குமோ மேல்? 17
பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர்இரணம் கொடுத்தால் இடுவர் இடாரேசரணம் கொடுத்தாலும் தாம். 18
சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம்பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்நாழி அரிசிக்கே நாம். 19
அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மைமறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கிவெறுமைக்கு வித்தாய் விடும். 20
நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்தரும்சிவந்த தாமரையாள் தான். 21
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்பாவிகாள் அந்தப் பணம். 22
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமேபாதாள மூலி படருமே - மூதேவிசென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமேமன்றோரம் சொன்னார் மனை. 23
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழேமடக்கொடி இல்லா மனை. 24
ஆன முதலில் அதிகம் செலவானால்மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசைஎல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. 25
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்பசிவந்திடப் பறந்து போம். 26
ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றைநினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்எனையாளும் ஈசன் செயல். 27
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்தமாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்சாந்துணையும் சஞ்சலமே தான். 28
மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவிஇரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்உற்றார் உலகத் தவர். 29
தாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்பூந்தா மரை யோன் பொறிவழியே - வேந்தேஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாவெறுத்தாலும் போமோ விதி . 30
இழுக்குடைய பாட்டிற்(கு) இசைநன்று சாலும்ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடையவீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்தாரத்தின் நன்று தனி. 31
ஆறிடும் மேடும் மடுவும்போ லாம்செல்வம்மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடும்தண்ணீரும் வாரும் தருமமே சார்பாகஉண்ணீர்மை வீறும் உயர்ந்து. 32
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்வேருக்கு நெக்கு விடும். 33
கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் - இல்லானைஇல்லாளும் வேண்டாள் மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்செல்லா(து) அவன்வாயிற் சொல். 34
பூவாதே காய்க்கும் மரமுள மக்களுளும்ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவாவிரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்குஉரைத்தாலும் தோன்றா(து) உணர்வு. 35
நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்கொண்ட கருவளிக்கும் கொள்கைபோல் - ஒண்தொடீபோதம் தனம்கல்வி பொன்றவரும் காலமயல்மாதர்மேல் வைப்பார் மனம். 36
வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்கண்ணுறுவ தல்லால் கவலைப் படேல் நெஞ்சேவிண்ணுறுவார்க் கில்லை விதி. 37
நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலைதானதாம் தத்துவமாம் சம்பறுத்தார் யாக்கைக்குப்போனவா தேடும் பொருள். 38
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்பும்கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்முலையளவே ஆகுமாம் மூப்பு. 39
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்மூவர் தமிழும் முனிமொழியும் - கோவைதிருவா சகமும் திருமூலர் சொல்லும்ஒருவா சகமென் றுணர். 40

Monday, September 20, 2010

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு

ஒற்ற பதிற்றுப் பத்து ஓங்கு பரி பாடல்

கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு

அகம் புறம் என இத்திறத்தே எட்டுத் தொகை.

எட்டுத் தொகை பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப் பத்து, பரி பாடல், கலித் தொகை, அக நானூறு, புற நானூறு என்பனவாம்.



வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு


யாண்டும் இடும்பை இல.


பற்று இல்லாத பண்பை உடைய இறைவன் காலடி பணிந்தவர்க்கு ஒருபோதும் துன்பம் என்பதே இல்லை.


Thursday, September 16, 2010



எற்றைக்கும் ஏழேல் பிறவிக்கும்


உற்றோமாய் யாம் ஆவோம்


உமக்கே யாம் ஆட் செய்வோம்


மற்றை எம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.


இந்த piravi மட்டும் illamal மற்றும் உள்ள ஏழு பிறவிக்கும் நான் உன்னை மட்டுமே நினைப்பேன். உனக்கே பணிவிடைகள் செய்வேன். என்னுடைய மற்ற ella ஆசைகளயும் களைந்து என்னை ஆட்கொண்டு அருள வேண்டும்.



Monday, September 13, 2010



SOME BODY BORN GREAT

SOME BODY BECOMES GREAT

GREATNESS IS THRUST UPON SOME ONE.

WHO IS HE.... SO HUMBLE OR ACTING AS IF HE IS HUMBLE......... GOD ONLY KNOWS ........

BUT HIS LIFE HAS GOT MANY THINGS TO BE LEARNT...

Sunday, August 29, 2010

பயிரா மயிரா

பயிருக்கு உயிர் உண்டுன்னு கண்டான் ஒரு இந்தியன்.

மயிருக்கும் உயிர் உண்டுல்ல. அதான் இது.

பயிர் வளர்ந்து பருவம் வந்தா அறுப்போம்.

மயிர் வளர்ந்து உருவத்த மறைச்சா சிரைப்போம்.

பயிர அறுத்தா பலன் இருக்கு.

அட இந்த மயிர சிரைச்சா என்ன பலன்?

மண்ணுல வளம் இருந்தா பயிர் நல்ல வளரும்பாக.

அப்போ மண்டைல நல்லாவளம் இருந்தா மயிரும் நல்லா வளருமோ?

ஏன் இந்த கொலை வெறின்னு நீங்க கேக்குறது புரியிது.

மயிர் ஒன்னும் சின்ன விஷயம் இல்லங்க.

மயிர் போச்சுன்னா உயிரையே vitrumaam மான்.

ஆசாமிகள் எல்லாம் சாமியாமாற இதத்தானே வளர்க்கிறாங்க இல்ல சிரைக்கிறாங்க.

வள்ளுவர் கூட சொல்லிருக்காரு வளக்கவும் சிரைக்கவும் வேணாம்

athuanla நான் sollurathu என்னன்னா

மயிர் peraatha visayamunnu ஒன்னும் ulagathula இல்ல

ellathayum kavanama seiyunga



athu ஒன்னும் இல்ல sori vanthavan kaiyum blog vechu iurkkavam kaiyum summavae irukkathuilla.

innaikku ennada eluthurathunnu yosichu paatha ஒன்னும் mandaikku ettala



athaa இந்த மொக்க



endrum anbudam



ungal VASAVI









.

இறந்த காலம்

அது ஒரு மார்கழி மாத காலை பொழுது. அவன் சாலை ஓரம் நடந்து சென்றுகொண்டு இருந்தான். பனி விழுந்து ஈரமாய் இருந்தன சாலைகள். மெல்லிய ஊதல் காற்று உடலில் பட்டு ரோமங்கள் சிலிர்த்தன. வீடுகளின் வாசலில் பெண்கள் சாணம் இட்டு மெழுகி அழகிய கோலங்கள் இட்டு நடுவில் மாட்டு சாணம் உருட்டி வைத்து அதன் நடுவில் பரங்கி பூ வைத்து இருந்தனர். தொலைவில் பெருமாள் கோவில் மணி ஓசை பூஜை தொடங்கி விட்டதை தெருவித்து கொண்டது. இன்னும் சற்று நேரத்தில் பூஜை முடிந்து சுடச்சுட வெண்பொங்கல் விநியோகம் ஆரம்பம் ஆகிவிடும். ஏனோ கோவில் மணி கேட்டதும் பொங்கல் ஞாபகம் தான் வந்ததே தவிர ஆண்டாளோ திருப்பாவை திருவெம்பாவையோ ஞாபகம் வரவில்லை. அப்படியே நடந்து சென்று தெப்பகுளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். மார்கழி மாத பனி இறங்கிய குளத்தில் குளித்தது உடல் சூடு எல்லாம் போனதைப் போல் இருந்தது. சட்டென்று காலில் ஒரு சூடு. காலில் ஒரு சிகரட் துண்டு சுட்டு விட்டது. எதிரில் டூ வீலரில் வந்தவன், முகத்தில் புகையை ஊதிவிட்டு போனான். அடடே இவன் இறந்தகாலத்தில் மூழ்கி போனானோ.? அதுதான் இறந்து போய்விட்டதே......!!!!!!